districts

img

வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

 திருவள்ளூர், அக் 26- வடசென்னை அனல்மின் நிலைய 2வது நிலையின் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும்  தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி புதனன்று வேலை நிறுத்தம் செய்தனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி புரியும்  ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம்  செய்ய வேண்டும், பணியின் போது உயிரி ழக்கும் ஊழியர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கி பணி பாதுகாப்பு வழங்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தி சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கடந்த  அக் 17ஆம் தேதி போராட்டத்தை துவக்கி னர். தமிழக அரசு உரிய உத்தரவாதம் அளிக்காததால் ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டை, நெல்லூர் என அடுத்தடுத்து கடந்த 9நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதனன்று (அக் 26)  வடசென்னை அனல் மின் நிலைய 2வது நிலையின் வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆந்திராவில் நடை பெற்றுவரும் தொடர் போராட்டத்தை ஆதரித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர  வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் பணி நிரந்தரம் செய்யும் வரையில் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஊதியம் வழங்கா மல் மின்வாரியமே நேரடியாக தொழிலாளர்க ளுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுத்திட  வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் அனல்மின் நிலைய அதிகாரிகள், காவல் துறையினர் தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.