திருவள்ளூர் மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோழவரம் ஒன்றிய செயலாளரும், ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவருமான ஜி.வி.எல்லையனுக்கு முத்தமிழ் கலைச்சங்கம் அறக்கட்டளை சார்பில் மாமணி விருது வழங்கப்பட்டது. நாமக்கலில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்காக சிறப்பாக செயல்பட்ட 10 ஊராட்சிமன்ற தலைவர்களை தேர்வு செய்து, தமிழ் மாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் சோழவரம் ஒன்றிய குழு உறுப்பினர் இ.ரவி, கிளைச் செயலாளர்கள் ஜெயகுமார், கார்த்திக், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திருமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.