districts

மகளிர் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி

திருவள்ளூர்,ஜன.6- திருவள்ளூர் மாவட்டத்தில் 44 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 546  உறுப்பினர்களின்  ரூ1.45 கோடி மதிப்பீட்டிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆவடி மாநக ராட்சி ஆணையர் தர்பகராஜ் துணை மேயர் சூரியகுமார், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.