districts

img

கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்: பகத்சிங் நினைவு நாளில் சூளுரை

திருவள்ளூர், மார்ச் 23- ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி மாவீரன் பகத்சிங் நினைவு நாளில்,  கார்ப்பரேட் காவி பாசி சத்தை வீழ்த்துவோம் என்ற முழக்கத்துடன் வியா ழனன்று (மார்ச் 23) கும்மிடிப்பூண்டியில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பகத்சிங் நினைவு நாளான வியாழனன்று கும்மிடிப்பூண்டியில் சிஐடியு, ஏஐடியுசி, எஸ்டிபிஐ, எல்டியுசி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, ஐஎன்டியுசி, டிஎய்எப்ஐ, மனித நேய மக்கள் கட்சி ஆகிய அமைப் புகள் சார்பில்  இயக்கம் நடைபெற்றது. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் மாநில இணைச் செயலாளர் கே.எம்.விகந்தர் தலைமை தாங்கினார். இடது தொழிற்சங்க மையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமார், சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஜெ.அருள்,  மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் ஷேக்  முகமது அலி, இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் ப.லோகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் இ.ராஜேந்திரன், எல்டியுசி நிர்வாகி ஜானகிராமன் உட்பட பலர் பேசினர். முன்னதாக கும்மிடிப் பூண்டி ரெட்டம்பேடு சாலை யில் துவங்கிய ஊர்வலம் பேருந்து நிலையம் அருகில் நிறைவு பெற்றது.