திருவள்ளூர், பிப்.28- மோட்டார் வாகன சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலா ளர் சம்மேளனம், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் சார்பில் செவ்வாயன்று (பிப் 28) திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பகல் 12 மணி முதல் 12.15 வரை அனைத்து வாகனங்களையும் 15 நிமிடம் நிறுத்துவது என்ற முறையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. செங்குன்றம் கூட்டுச் சாலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் எம்.சந்திரசேகரன் தலைமையிலும் திருத்தணியில் ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.கரிமுல்லா தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூரில் மாவட்ட துணைச் செயலா ளர் சங்கர் தலைமையிலும், பொன்னியில் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சந்திரன் தலைமையிலும் நடைபெற்ற போராட்டத் தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். வேப்பம்பட்டில் ஆட்டோ சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. கவரைப் பேட்டையில் பார்த்திபன் தலைமையிலும் மீஞ்சூரில் ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாஸ்கரன் தலைமையிலும் வாகன நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது.