திருவள்ளூர், நவ 22- இலட்சிவாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தலித் மக்களுக்கு நிபந்தனையின்றி குடிமனைப் பட்டா வழங்க தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக் கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், லட்சி வாக்கம் ஊராட்சியில் 3,500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். இதில் ஆதிதிராவிட குடும்பங் கள் 300. தொடர்ந்து போராடியதன் விளைவாக 1984 ஆண்டு நலத்துறை சார்பில் 30 பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள 127 குடும்பங்களும் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். இந்த 127 குடும்பங்களுக்கும் தலா 3 சென்ட் நிலம் வழங்க 3.81 ஏக்கர் நிலம் மட்டுமே தேவைப்படு கிறது. ஆனால் இலட்சியவாக்கம் ஊராட்சியில் கிராம நத்தம் 3 ஏக்கர், தோப்பு புறம்போக்கு ஐந்தரை ஏக்கர், மேய்கால் புறம்போக்கு 25 ஏக்கர், ஓடை புறம்போக்கு 4.84 ஏக்கர், குளம் புறம்போக்கு 6 ஏக்கர், வரத்துக் கால்வாய் 5.5 ஏக்கர், ஈச்சங்காடு 5 ஏக்கர் என மொத்தம் 54.84 ஏக்கர் நிலம் ஆதிக்க சாதியினர் ஆக்கிர மித்து அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்க ளாக, மாநில நெடுஞ்சாலை ஓரம் செங்காளம்மான் கோயில் அருகில் தலித் மக்கள் காத்திருக்கும் போராட் டம் நடத்தி வருகின்றனர். மக்களின் நலன் கருதி தமிழக அரசும், திரு வள்ளூர் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து வீட்டுமனைகளை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் வலி யுறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தை தோல்வி
இரண்டாம் நாள் போராட்டத் தின்போது நடந்த பேச்சுவார்த்தை யில், “ தலித் மக்கள் கேட்கும் இடத் தில் வீட்டு மனைகள் கொடுப்பதற்கு அரசு நிர்வாகம் தயாராக உள்ளது. ஆனால், கால அவகாசம் வேண் டும் என்று வருவவாய் கோட்டாட்சி யர் தெரிவித்தார். ஆனாலும் போராடி வரும் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள வில்லை. உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்று போராட் டத்தை தொடர்ந்து வருகின்றனர். தலித் மக்களின் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரவி, கங்கா தரன், ரமா, பத்மா, விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தொகுதி செயலா ளர் ெஜ.ஜீவா, பகுஜன்சமாஜ்வாதி கட்சி நிர்வாகி எம்.சமரன் உட்பட்ட பலர் உரையாற்றினர்.