திருவள்ளூர், டிச 13- திருவள்ளூர் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் துவக்கி செயல்பட்டு வருகிறது. இம் மக்களுக்கு இதுவரை குடிமனை பட்டா, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கூட கிடைக்க வில்லை. இந்நிலையில் வேட்டைக்காரன் இன மக்களை, பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து வரு கிறது. குடிமனைப் பட்டா, தொகுப்பு வீடு கள், குடிநீர் கேட்டு நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரி வித்ததோடு அந்த போராட்டங்கள் வெற்றி பெற உறுதுணையாக இருந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு குடிமனை பட்டா உள்ளிட்ட உரிமைகள் கிடைத்துள்ளது. அடிப்படை உரிமைகளுக்காகவும், தங்க ளின் வாழ்வாதாரத்திற்காகவும் தொடர்ந்து நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து ஏராளமான வேட்டைக்காரன் பழங்குடியினர் கொட்டும் மழையிலும் திங்களன்று (டிச 12) கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். விளாப்பாக்கம், வேலாகபுரம், வெள்ளி யூர், மாத்தூர், வேப்பம்பட்டு, செவ்வாப் பேட்டை, மிட்னமல்லி, திருத்தணி போன்ற கிராமங்களிலிருந்து 22 பெண்கள் உட்பட 68 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், வட்டக் குழு உறுப்பினர் கே.முருகன், தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் எம்.சேட்டு, மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதரன், பொருளாளர் ஜி.ஏழுமலை, மாவட்ட தலைவர் டி.டில்லி, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் விஜியா ஆகியோர் கலந்து கொண்டனர்.