திருவள்ளூர், செப் 27- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த சிறுமி சக்கராசனத்தில் நின்றபடி ஒரு நிமிடத்தில் 137 முறை தலை யையும், இடுப்பையும் இணைத்து உலக சாதனை படைத்தார். கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் ஹேமாவதி தம்பதியரின் மகள் எஸ்.பி.ஹாசினிஸ்ரீ (9). இவர் அங்குள்ள மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 4ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகாசன பயிற்சி பெற்று வருகிறார். இவரது சாதனை இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’, வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்’, அசிஸ்ட் உலக சாதனை’, ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன. இந்நிகழ்வில் ஹாசினி ஸ்ரீக்கு யோகா பயிற்சி அளித்த பயிற்சியாளர் சந்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.