திருவள்ளூர் அக் 25- திருவள்ளூர் மாவட்டம், பிச்சாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் திலகா(37) இவருக்கு 15 வயது மகளான உஷா உள்ளார். உஷா தனது தாயாருடன் கும்மிடிப் பூண்டி அருகில் உள்ள நெல்வாய் கிராமத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் பெரியபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த உஷா கடந்த 10 ஆம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும் பாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கொள்ளனுர் ஏரியில் இளம் பெண் ஒருவரின் சடலம் மிதப்ப தாக வந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதிரிவேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அது காணாமல் போன சிறுமி உஷான என தெரிய வந்தது. மேலும் சிறுமியின் கழுத்திலும் முகத்திலும் காயங்கள் இருந்ததால் சிறுமி கொலை செய்யப்பட்டு இருக்க லாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் பள்ளிக்கு சென்று வரும் பொழுது மூக்கரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (19) என்ற இளைஞர் உடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது, இதனை அடுத்து தலைமறைவாக இருந்த பிர வீனை பிடித்து விசாரித்ததில் சிறுமி உஷாவை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றியது தெரியவந்தது. சிறுமியை தீர்த்து கட்ட அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (17) என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டிய தாகவும், அதன்படி சம்பவத்தன்று உஷாவை திருமணம் செய்து கொள்வ தாக ஆசை வார்த்தை கூறி வரவழைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசியது தெரிய வந்துள்ளது. இதனை எடுத்து பிரவீன், அவனது நண்பன் ரஞ்சித் ஆகியோரை கைது செய்து மேலும் இருவருக்கும் வேறு ஏதேனும் இது போன்ற குற்ற வழக்கு களில் தொடர்பு உள்ளதா ? என்று விசாரித்து வருகின்றனர்.