districts

img

அரசு நிலத்தை மீட்க விவசாயிகள் போராட்டம்

திருவள்ளூர், மார்ச் 22- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 385 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் சிலர்  ஆக்கிரமிப்பு செய்துள்ள னர். இதனை மீட்டு ஊராட்சி யில் ஒப்படைக்க வேண்டும்.  போராடிய விவசாயியை தாக்கிய நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கசிவு நீர் குட்டை ஆக்கிர மிப்பை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செவ்வா யன்று (மார்ச் 21) கும்மிடிப் பூண்டியில் வட்ட செயலாளர்  எம்.சிவக்குமார் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மாநிலச் செய லாளர் பி.துளசிநாராயணன், வட்டத் தலைவர் ரவிக் குமார், துணைத் தலைவர் கள் கருணாமூர்த்தி, ரவி, சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.