திருவள்ளூர், பிப்.18- எல்ஐசி முகவர் சங்கத்தின் பொன்னேரி கிளையின் ராஜ்குமார் மறைவையொட்டி அவரது மனைவி பர்மா ராணியிடம் அகில இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர் சங்கம் சார்பில் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எல்ஐசி முகவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம், சென்னை கோட்ட 2 தலைவர் வி.நாகலிங்கம், பொன்னேரி கிளை பொறுப்பாளர் செல்வகுமார், டி.சி.லோகநாதன், ஆறுமுகம், கே.ஆர். கண்ணன், டி.சுரேஷ் பாபு, பொருளாளர் எம்.மதுசூதனா ஆகியோர் கலந்து கொண்டனர்.