districts

img

மலைவாழ் சங்கம் நடத்திய வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

திருவள்ளூர், நவ 6- பழங்குடி இன இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சி முகாம் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் சார்பில் ஞாயிறன்று  (நவ.6)  திருவள்ளூரில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித் துறை யின் கீழ் தமிழ்நாடு ஊரக வாழ்வா தார இயக்கம் செயல்படுகிறது.இதில் தீனதயாள் உபாத்யாயா கிராமீன் கவுசல்யா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கு தொழில்பயிற்சி அளிக்க,  ஒன்றிய, மாநில  அரசு கள் குறிப்பிட்ட நிதியை ஆண்டு  தோறும் ஒதுக்குகிறது. இதில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியும், அரசு வேலைவாய்ப்புக்களும் கிடைப் பதில்லை என்கிறார்கள். இத னால் பழங்குடி இன மக்கள்  சமூக ரீதியாகவும், பொருளா தார ரீதியாகவும் முன்னேற்றம் அடையவில்லை. சாதி சான்று, குடிமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள் போன்ற அடிப்படை தேவைக ளுக்காக  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் போராடி வருகின்றனர்.  மேலும் பழங்குடி இன மக்கள் பொருளாதாரத்திலும்   மேம்பாடு அடைய, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெரும் வகையில் தொழிற் பயிற்சியை மலைவாழ் மக்கள்  சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று  திருவள்ளூரில் காந்தி பவுண்டே சன் நிர்வாகி மோகன், தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பரமேஸ்வரன் ஆகியோர் பயிற்சியளித்தனர். இந்த பயிற்சியில் டிராக்டர் பழுது பார்த்தல் பயிற்சி, செவி லியர் பயிற்சி, இணைய தளம்,   தையல், அழகு கலை போன்ற  பயிற்சிகளில் சேருவதற்கான விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஜி.மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். தமிழ்அரசு  முகாமில் 18 வயது  முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட னர்.