திருவள்ளூர், நவ.19- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர் வினாடி -வினா போட்டி சோழவ ரம் அருகில் உள்ள அலமாதி யில் சனிக்கிழமையன்று (நவ 19) நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், அலமாதி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி நூற்றுக்கணக்கான மாண வர்கள் பங்கேற்புடன் நடை பெற்றது. இதில் திருவள் ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராமன் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார்.அறிவியல் இயக்க நிர்வாகி சாந்தகுமாரி வரவேற்றார்.இதில் தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.மோசஸ் பிரபு, பொருளாளர் சண்முக சுந்தரம், ஆசிரியர்கள் தாரிணி, கமலேஷ் தாள முத்து நடராசன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணை நிர்வாகி பி.ெஜய நாராயணன் தலைமை தாங்கினார்.