districts

img

கடன் தொல்லையால் மாற்றுத்திறனாளி நடுரோட்டில் தற்கொலை

திருவள்ளூர்,அக்.26- திருவள்ளூரை அடுத்த புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது38). மாற்றுத்திறனாளியான இவர் கடம்பத்தூர் ரயில்  நிலையம் அருகே செல்போன் ரீசார்ஜ் கடை வைத்து நடத்தி வந்தார்.  அவர் கடன் தொல்லை காரணமாக மன உளைச் சலில் இருந்ததாக கூறப்படு கிறது. இந்த நிலையில் புதனன்று சுரேஷ் புதுமாவிலங்கை, கடம்பத் தூர் - பேரம்பாக்கம் நெடுஞ் சாலையில் தனது மூன்று சக்கர மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நடுரோட்டில் நின்றபடி தயாராக பாட்டி லில் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய சுரேஷ் சம்பவ  இடத்திலேயே இறந்தார்.  கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் சுரேஷ்  தற்கொலை செய்து கொண் டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.