திருவள்ளூர், ஜன. 7- திருவள்ளூர் அருகே விஷ்ணுவாக்கத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க, பேச்சுவார்த் தையின் போது ஒப்புக் கொண்ட இடத்தில் கட்டா மல், சாதி ஆதிக்க சக்திக ளுக்கு ஆதரவாக அதிகாரி கள் செயல்பட்டுள்ளனர். விஷ்ணுவாக்கத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் விஷ்ணு வாக்கம் பகுதிக்கு சென்று உரிய விசாரணை நடத்தி பிறகு, பேருந்து நிழற் குடை கட்டுவதை தடுக்கும் வகை யில் சாதி ஆதிக்க சக்திகள் வேய்ந்த இரும்பு வேலி களை அகற்றினார். இருப்பினும் அந்த இடத்தில் நிழற்குடை அமை க்கப்படவில்லை. இதனால் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதத்தில் ஆக்கிரமிப்பு களை அகற்றி பேருந்து நிழ ற்குடை அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் உறுதி யளித்தார். ஆனால் மக்க ளுக்கு சம்பந்தமில்லாத இடத்தில் நிழற்குடை கட்ட ஏற்பாடு செய்ததை அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையறிந்து காவல் துறை அதிகாரிகள், திரு வள்ளூர் வட்டாட்சியர் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். கட்சியின் வட்டச் செயலாளர் ஆர்.தமிழ் அரசு, வட்டக் குழு உறுப்பினர்கள் முருகன், கலையரசு, பேரத்தூர் கிராம மக்கள் முன்னிலையில் பேச்சு நடைபெற்றது. பின்னர் சர்ச்சைக்குரிய இடத்தில் நிழற்குடை அமைக்கும் பணியை வட்டாட்சியர் நிறுத்தி வைத்தார். இதனால் ஆத்திர மடைந்த ஆதிக்க சாதியை சேர்ந்த வரதராஜன் என்ப வரின் மகன் சதீஷ் என்பவர், பேரத்தூர் தலித் பகுதியை சேர்ந்த ராஜேஷை சாதியை சொல்லி இழிவாக திட்டிய தாகவும் கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படு கிறது. கொலை மிரட்டல் விடுத்த சதீஷ் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் ராஜே சுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் வெங்கல் காவல் நிலையத் தில் புகார் அளிக்கப்பட் டுள்ளது.