திருவள்ளூர், நவ 21- திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக் கோட்டை அருகில் உள்ள இலட்சி வாக்கம் ஊராட்சியில் 500 கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் காலகாலமாக வசித்து வருகின்றனர். இங்கு கடுமையான இட நெருக்கடியால் பாதிப்பிற்குள்ளான மக்கள், குடும்பத்திற்கு தலா 3 சென்ட் வீதம் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டுமனை வழங்காமல் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் ஏமாற்றி வந்துள்ளனர். இதனிடையே இலட்சிவாக்கம் ஊராட்சியிலேயே தரிசாக உள்ள 5.1/2- ஏக்கர் தோப்பு புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை வகை மாற்றம் செய்து இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. எனினும் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்த நிலையில் ஊத்துக்கோட்டை வருவாய் துறையினர் கடந்த வாரம் சம்மந்தப் பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு முதல் கட்டமாக 142 குடும்பங்களுக்கு குடிமனை வழங்க பட்டியல் தயார் செய்துள்ளனர். இதை அறிந்த அதே கிராமத்தை சேர்ந்த திமுக, அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகளில் உள்ள ஆதிக்க சாதியினர் தலித் மக்களுக்கு குடிமனை வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்த சூழலில் வீட்டுமனை வழங்குவதாக இருந்ததை, அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ள தாக தெரிகிறது. இதனை கண்டித்து கிராம மக்கள் திங்களன்று (நவ 21) பால வாக்கம் மாநில நெடுஞ்சாலை ஓரம் செங்காளம்மான் கோயில் அருகில் காத்தி ருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை வட்டாச்சியர் அருண்குமார் ஒரு மாதத்திற்கு முன்பு எழுத்து பூர்வமாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அம்மக்கள் கோருகிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்.
கட்சியின் ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், 40 ஆண்டுகளாக போராடி வரும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு உடனடியாக, இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க வேண்டும், ஆதிக்க சாதியினர் தடையாக இருப்பதாக, அதிகாரிகள் காரணம் காட்டாமல் குடிமனையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.கங்காதரன், ஏ.பத்மா, வட்டக் குழு உறுப்பினர்கள் பி.அருள், எஸ்.ரம்யா, கிளைச் செயலாளர் எஸ்.கண்ணன் உட்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு திருவள்ளூர் கோட்டாட்சியர் மகாபாரதி வந்து பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது இன்னும் 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்றார். அதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் கால அவ காசம் எல்லாம் எங்களை ஏமாற்றம் வேலை தான். ஏற்கனவே குடி மனை பட்டா வழங்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என தெரிவித்து, போராட்டத்தை தொடர்ந்தனர்.