districts

img

தொடர் மின்வெட்டை கண்டித்து மீஞ்சூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஜூன் 26- மீஞ்சூர் பகுதியில் தொடரும் மின் தடையை சீரமைக்க வேண்டும் என வலி யுறுத்தி சிபிஎம் சார்பில் புதனன்று (ஜூன் 26), மீஞ்சூர் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீஞ்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும், துணை மின் நிலையங்களில் மெகாவாட் திறனை அதிகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தினர். இதற்கு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் என்.ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.விஜயன், ஏ.ஜி.சந்தானம், ஒன்றிய செயலாளர் இ.ஜெய வேலு, மாவட்ட குழு உறுப்பினர் பி.கதிர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.