திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கத்தில் மாவட்ட சுகாதார பேரவை குழு கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூடுதல் ஆட்சியர் ஆ.ரிஷப், இணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மரு.சதீஷ் ராகவன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட ஆலோசகர் மரு.ஷோபா ஆகியோர் கலந்து கொண்டனர்.