திருவள்ளூர், டிச 10- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் செட்டிநாடு நிறுவன நிலக்கரி கையாளும் டெர்மினலை ஜிண்டால் நிறுவனம் நடத்தி வருகிறது. கப்பல் மூலம் வரும் நிலக்கரியை துறைமுகத்தில் இறக்கி, அதை சேமித்து அங்கிருந்து பல்வேறு மின் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் நடை பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மத்திய உதவி தொழிலாளர் சென்னை ஆணையாளர் பி.பாலாஜி, ஜிண்டால் நிறுவன அதிகாரிகள் பாண்டியன், ஜிடிஎஸ் மற்றும் டி.ஜி அசோசியேட்ஸ் ஒப்பந்ததார்கள், சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன், பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பகுதிச் செயலாளர் ஜி.விநாய கமூர்த்தி, கிளை நிர்வாகிகள் முகமது ஷெரிப், சுந்தர் செட்டி, தமிழ்செல்வன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனடிப்படையில், மழைக் கோட், ஆண்டுக்கு 2 செட் சீருடை, காலணி, தலைக்கவசம், ரூ.45 ஆயி ரத்திற்கு மருத்துவ காப்பீடு, விபத்துகால காப்பீடு ரூ.10 லட்சம், மாதத்திற்கு 2 சோப், ஒரு டவல் வழங்கப்படும். மேலும் முதல் வருடம் ரூ.600, 2ஆவது வருடம் ரூ.700, 3ஆவது வருடம் 800, 4ஆவது வருடம் ரூ.1000 வரை உதிய உயர்வு கிடைக்கும். மேலும் ஒன்றிய அரசால் அறிவிக்கப்படும் ஆண்டிற்கு 2 முறை அகவிலைப்படியும் வழங்கப்படும். இந்த ஒப்பந்தத்தால் 200 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பயனடைவர்.