districts

img

ஆர்.கே.பேட்டையில் பரிசளிப்பு விழா

திருவள்ளூர், செப் 26- பாலர் பூங்கா சார்பில் ஞாயிறன்று (செப் 25) குழந்தை களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு பாலர் பூங்கா சார்பில் ஆர்கே பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தில் குறள் நெறி அரிமா சங்க தொடக்கப் பள்ளியில் 8 வயது முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் சு. கிருஷ்ணன்  ஒருங்கிணைப்பாளராகவும்,  வீரமணி, பழனி ஆகியோர் துணை ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 14 பேர் கொண்ட குழு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சி.பெருமாள் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

;