திருவள்ளூர், நவ 25- திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு கனமழையின் போது பாதிக்கப்பட்ட பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மீஞ்சூரில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்று கையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் கட்டிய விவசாய பயிர் காப்பீடு தொகையில் தங்களுக்கு ஒதுக்க வேண்டிய உரிய பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங் களை எழுப்பினர். விவசாய சங்கத்தினர் மழைநீர் சூழ்ந்த சேற்றில் நின்றபடியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தலை வர்களிடம் வேளாண் துறை அதிகாரி செல்வ குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் மேற்கொண்டதை தொடர்ந்து விவசாயி கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.கதிர்வேலு தலைமை தாங்கினார்.மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், ஒன்றிய நிர்வாகிகள் தியாக ராஜன், சுந்தரம், புவனேஸ்வரி, கதிர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.