திருவள்ளூர், டிச 13- சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயி களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை உட னடியாக வழங்க வேண்டும் என வலி யுறுத்தி திருத்தணியில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (டிச 13) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருமண்டங்குடி திருஆரூரான் உட்பட 7 சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயி களுக்கு வழங்க வேண்டிய ரூ.500 கோடி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளின் பெயரில் சர்க்கரை ஆலைகள் வாங்கிய கடன் தொகை ரூ.300 கோடியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும், வங்கி கடனி லிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஸ்ரீநாத் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சி.பெரு மாள், மாநிலக் குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பேசினர்.