திருவள்ளூர், நவ 24- ஆர்.கே.பேட்டையில் சாலைகளை 15 நாட்களில் சீரமைக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததால் நாற்று நடும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டையில் 5 சாலைகள் குண்டும் குழியு மாக பழுதடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு சமை யல் கூடம், தொடக்கப்பள்ளி கட்டிடம், ஆர்.கே.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடம் ஆகியவை பழுதடைந்து உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று (நவ 22) நாற்று நடும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர். தகவல் அறிந்து போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை வட்டாட்சியர், பெருந்தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பழுதடைந்த தெருக்கள் சீரமைத்து தரப்படும் என்று உறுதியளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் பிற கோரிக்கைகள் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள், வட்ட குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன்,கிளை செய லாளர் எஸ்.யு.ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.