districts

img

ஆதார் எண் இணைத்தால் தான் கூலியா ? 100 நாள் திட்ட பயனாளிகள் அதிர்ச்சி

திருவள்ளூர், மார்ச் 7- ஆதார் எண் இணைத் தால் தான் கூலி வழங்கப் படும் என சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஒ) தெரிவித்ததால்,  நூறு நாள் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சோழவரம் அருகில் உள்ள நல்லூர் ஊராட்சியில் 800 க்கும் மேற்பட்டவர்கள் நூறு வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தனர்.இந்த வருவாய் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்த னர். இந்த சூழலில் கடந்த 6 மாதங்களாக வேலை வழங்கவில்லை. இதனால் அம்மக்கள் வருவாய் இன்றி  தவிக்கின்றனர். இந்த நிலையில் உடனடி யாக வேலை வழங்க வேண்டும், ஏற்கனவே வேலை செய்தவர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க  வேண்டும், புதிய அட்டை  கேட்டு விண்ணப்பித்தவர் களுக்கும் வேலை அட்டை கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சோழவரம் பிடிஒ அலு வலக நுழைவு வாயிலில்  செவ்வாயன்று (மார்ச்7)  ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதனை தொடர்ந்து  வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது அடுத்த இரண்டு நாட்களில் வேலை  வழங்கப்படும். மேலும் நூறு நாள்  பணியாளர் வேலை அட்டையுடன் ஆதார் எண் இணைக்கவில்லை என்றால் கூலி வழங்கப்படாது என தெரிவித்துள்ளார். ஆதார் எண் இணைத்தவுடன் விரை வில் பாக்கி சம்பளம் வழங் கப்படும் என தெரிவித்துள் ளார். மாதர் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற இந்த போராட்டத் திற்கு மாதர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எம்.ரமணி தலைமை தாங்கி னார்.  செயலாளர் ஏ.பத்மா,  சிபிஎம் ஒன்றிய செயலாள ரும், ஞாயிறு ஊராட்சி மன்ற  தலைவர் ஜி.வி.எல்லை யன்,  விவசாய தொழிலாளர்  சங்கத்தின் மாவட்ட தலை வர் இ.தவமணி, மாவட்ட நிர்வாகிகள் சரளா,  ருக்மணி  ஆகியோர் பேசினர்.