திருவள்ளூர், மார்ச் 14- திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளில், குடிநீர் மேல் தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என மொத்தம் 400-கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 7ஆவது ஊதிய குழு நிலுவை தொகை 50-மாதங்களாக வழங்கா மல் அதிகாரிகள் ஏமாற்றி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் மீஞ்சூர் பிடிஒ அலுவலர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்த நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு 2-ஆண்டுகளாக வழங்காமல் உள்ள சம்பள பாக்கியை வழங்க வேண்டும், குடிநீர் மேல்தேக்க தொட்டி இயக்குப வர்கள் சம்பளத்தில் மாதந்தோறும் ரூ 500 குறைத்து வழங்குவதை மொத்தமாக சேர்த்து வழங்க வேண்டும், காப்பீட்டுக்காக பிடித்தம் செய்யும் பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும், எஸ்.ஆர்.புத்தகம் இருப் பதை உத்தரவாதம் செய்ய வேண்டும், தூய்மை காவலர்களுக்கு மாதம்தோறும் 10-தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். கல்பாக்கம் ஊராட்சியில் டேக் ஆபரேட்டராக பணியாற்றும் ரீட்டா விற்கு 4-ஆண்டுகளாக ஊதியம் வழங்கவில்லை. இப்படி மெரட்டூர், சோம்பட்டு என்று பல ஊராட்சிகளில் ஆண்டு கணக்கில் ஊதியம் வழங்கப்படாத நிலை உள்ளது. இந்த நிலையில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி திங்களன்று (மார்ச்-14) மீஞ்சூர் பிடிஒ அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி ஒஎச்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தை
தூய்மை பணியாளர்களுக்கு ரூ.2000-ஊதிய உயர்வும், குடிநீர் மேல் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ரூ.900- ஊதிய உயர்வு வழங்கப்படும் என மீஞ்சூர் பிடிஒ பேச்சுவார்த்தையின் போது தெரிவித்தார்.இதனை தொடர்ந்து காத்திருக்கும் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஏ.ஜி.சந்தானம், மாநில குழு உறுப்பி னர் கே.எஸ்.குமரவேல், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் இ.ஜெயவேல், எஸ்.எம்.அனிப் விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி எஸ்.இ.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.