districts

மணல் கடத்திய வழக்கில் - 2 பேர் கைது

திருவள்ளூர்,மார்ச் 22- திருவள்ளூரை அடுத்த மேல் விளாகம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த  டிராக்டரை  காவல்துறையினர் சோதனையிட்ட போது திருட்டுத்தனமாக மணல்  கொண்டுசெல்லப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர் இரண்டு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். திருவள்ளூரை அடுத்த பழையனூரை சேர்ந்த ஆதிகேசவன் (வயது 40),சுரேஷ் ( 32)ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

;