திருவண்ணாமலை,நவ.13- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தென்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சொர்ணம் (38) இவர் கடந்த சனிக்கிழமை காலை நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள தங்களது விவசாய நிலத்துக்கு நடந்து சென்றார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சொர்ணம் குடை பிடித்தபடி விவசாய நிலத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை இடி தாக்கியது. இதில் சொர்ணம் உடல் கருகி அதே இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், சொர்ணத்தின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.