districts

img

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் படுகாயம்

திருவண்ணாமலை, பிப்.7- திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம் மாணிக்கமங்கலம் கிராமத்தில் பட்டியலினத்த வர்களுக்கு 1992-93ஆம் ஆண்டில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ்  10 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகள் சிதில மடைந்து வருவதால் பழுது நீக்கம் செய்ய வேண்டும் அல்லது இடித்துவிட்டு புதி தாக கட்டிக் கொடுக்க வலி யுறுத்தி பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு  கொடுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பலமுறை போராட்டங்களும் நடைபெற்றன. தொகுப்பு வீடுகளை பழுது நீக்கம் செய்ய மறுத்து வரும் அதிகாரிகள், ஒரு முறை வீடு கொடுத்தவர்க ளுக்கு மீண்டும் வீடு கொடுக்கும் திட்டமோ இல்லை எனக்கூறி புறக் கணித்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு வசிக்கும் செந்தில்குமார், வாசுகி தம்பதியரின் வீட்டு மேற்கூரை செவ்வாயன்று (பிப். 7) பெயர்ந்து விழுந் தது. அச்சமயம் வீட்டில் இருந்த அவரது மகள் செவ்வந்தியின் கைமீது விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  அவர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தும் உரிய அலுவலர்கள் எவரும் சம்பவ இடத்தை வந்து பார்க்கவில்லை. பட்டியலின மக்களின் உயிர்களோடும் வாழ்க்கையோடும் விளையாடாமல், உண்மையான அக்கறை கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து அனைத்து வீடுகளையும் இடித்துவிட்டு புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என கட்சியின் பெரணமல்லூர் ஒன்றியச் செயலாளர் நா.சேகரன், கிளைச் செய லாளர் ந.பிரபாகரன் ஆகி யோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.