திருவண்ணாமலை, ஏப்.24 - ஓய்வூதியர்கள் தொடர் பாக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திரு வண்ணாமலையில் நடை பெற்றது. இதனையொட்டி பேசிய சங்கத்தின் சி.இராமமூர்த்தி, பொதுச் செயலாளர் பா.ரவி ஆகி யோர், ஓய்வு பெற்ற சத்து ணவு, அங்கன்வாடி ஊழி யர்கள்,வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், குறைந்த பட்ச ஓய்வூதியமாக 7850 ரூபாய் வழங்க வலி யுறுத்தினர்.