திருவண்ணாமலை,நவ.23- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தவறான பூச்சி மருந்தை விளை நிலத்தில் தெளித்ததால் ஆறு ஏக்கர் நெற்பயிர் கருகி சேதமானதால் விவசாயி வேதனையடைந்துள்ளனர். செங்கத்தை அடுத்த திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சொக்கலிங்கம். தனது நிலத்தில் பயி ரிட்டுள்ள நெற்பயிருக்கு சேதம் விளைவிக்கும், பூச்சி மற்றும் களைகளை அகற்ற வட்டார வளர்ச்சி அலு வலகத்திற்கு எதிரே உள்ள அம்மன் பூச்சி மருந்து கடை யில் மருந்து வாங்கி தெளித்துள்ளார். மறுநாள் சென்று பார்த்த போது, பயிர் முழுவதும் காய்ந்து மஞ்சள் நிறத்தில் கருகி யுள்ளது. இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலுகா செயலாளர் எ.இலட்சுமணன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத் தலைவர் ஆர். காமராஜ், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் சிஎம்.பிரகாஷ், எம்.முபாரக் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட நெற்பயிரை பார்வை யிட்டனர். தொடர்ந்து, வேளாண்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர். செங்கம் பகுதி முழுவதும் பல்வேறு பூச்சி மருந்து கடை களில், காலாவதியான, அங்கிகாரம் இல்லாத மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேளாண் அதிகாரி களும், உரகட்டுப்பாட்டு அதிகாரிகளும் உரிய நட வடிக்கை எடுக்காததால், பயிர் பாதிப்பு ஏற்படுவதுடன், மண் வளமும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.