திருவண்ணாமலை,ஜூன்10- தமிழக பால் உற்பத்தி யில் 2வது இடத்தை பிடித்திருக்கிறது திரு வண்ணாமலை மாவட்டம். ஆனாலும், இந்த மாவட்டத்தில் பால் உற்பத்தியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை ஆவின் நிர்வாகம் கையாண்டு வருகிறது. திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் விவசாயி கள் உற்பத்தி செய்யும் இரண் டரை லட்சம் லிட்டர் பால் நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்துகிறது ஆவின் நிர்வாகம். அடுத்தாக, அம்மாப்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பால் மற்றும் பால்பவுடர் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பாலை கையாளும் திறன் கொண்டது. இந்த பால் பண்ணையில் நாள் ஒன்றுக்கு 20 மெட்ரிக் டன் பால்பவுடர், 10 மெட்ரிக் டன் வெண்ணெய் மற்றும் 5 மெட்ரிக் டன் நெய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனங்களில் தொடர்ந்து நடந்து வரும் முறை கேடுகளை களைந்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி யுள்ளனர். இந்த சூழ்நிலையில் திருவண்ணாமலை துணை பதிவாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன், ஆவின் பொது மேலாளர் மற்றும் துணை பதிவாளர் (பால்வளம்) ஆகியோர் பேச்சு நடத்தினர். அப்போது, பால் உற்பத்தியாளர்களுக்கு பணப்பட்டுவாடா உடனுக்கு டன் வழங்க வேண்டும், பால் கேன் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு முறை யாக வாடகை வழங்க வேண்டும், பிஎம்சி குளி ரூட்டும் நிலையங்களை திறக்க வேண்டும், பால் உற்பத்தியாளர் சங்க பணியாளர்களுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்தும் முறைகேட்டில் ஈடுபடும் முதுநிலை ஆய்வாளர்கள் மீனாட்சி, மணிகண்டன் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகள் மீது 20 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதனையடுத்து, இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.