ஆரணி, நவ. 14- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் 3 ஆயி ரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்காததால் சேரும் சகதியமாக காட்சி அளிக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலு வலகத்திலும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் மெய்யூரில் இருந்து பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டனர். இதனால் ஆத்திர மடைந்த அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திங்களன்று (நவ. 14) சேரும் சகதியுமாக உள்ள சாலை யில் ஏர் உழுது நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.