ஆரணி, டிச. 10- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குபட்ட சுபான்ராவ்பேட்டை இருளர் காலனி பகுதியில் சுமார் 70 ஆண்டுகளாக 15 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பட்டா கேட்டு மாவட்ட நிர்வாகம் வருவாய் துறைகளுக்கு பல முறை மனு அளித்தும், இதுவரை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர்கள் ஆரணி செய்யார் சாலை சுபான்ராவ்பேட்டை கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.