திருவண்ணாமலை, அக்.1- சிறுபான்மை மக்க ளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டாட்சியர் அலுவல கத்தில், மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. மாவட்டக் குழு உறுப்பினர் ஷேக் இஸ்மாயில் ஷரீஃப் தலைமை தாங்கினார். ஷகிலா பானு, பியாரி, சகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் யாசர் அராபத், மாவட்டச் செயலாளர் ஏ. அப்துல் காதர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ப. செல்வன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து, சிபிஎம் வட்டார செயலாளர் டி. வெங்கடேசன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் வே.சங்கர், ஏ.சர்தார் உள்ளிட்டோர் கொண்டனர். முன்னதாக, செய்யாறு பேருந்து நிலையம் அருகே இருந்து துவங்கிய பேரணியில் ஏராளமான சிறுபான்மை மக்கள் கலந்து கொண்டனர்.