திருவண்ணாமலை நகரில், ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. நகர செயலாளர் எம்.பிரகலநாதன் தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், மாவட்ட குழு உறுப்பினர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.