திருவண்ணாமலை, டிச. 5- விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் போளூர் வட்ட முதல் அமைப்புக் குழு மாநாடு அத்திமூரில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் ப.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அ.ரவிராஜ் வரவேற்றார் மாவட்டச் செயலாளர் எம்.பிரகலாதன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மு.வீரபத்திரன், நிர்வாகிகள் இரா.ரவிதாசன், கி.பாலமுருகன், அ.உதயகுமார், ம.வீரமுத்து, மு.அஞ்சலி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தேசிய வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலையை, 250 நாட்களாக உயர்த்தி, சட்டப்படி கூலி 600 ரூபாய் வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு வாரியம் அமைக்க வேண்டும், 60 வயது முடிந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டத் தலைவராக சரவணன், செயலாளராக ரவிராஜ், பொருளாளராக மாரிமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.