திருவண்ணாமலை, பிப். 9- திருவண்ணாமலை காஞ்சி ரோட்டில் வனப்பகுதியை ஒட்டி ஆடையூர் கிராமம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த விஜியின் மனைவி தெய்வானை 25 ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தினசரி காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு இரவில் பட்டியில் அடைத்து செல்வார். வழக்கம்போல் செவ்வாயன்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு பட்டியில் அடைத்து வைத்திருந்தார். இந்நிலையில் புதனன்று காலை பட்டிக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த 25 ஆடுகளை மர்ம விலங்கு கடித்திருப்பது தெரியவந்தது. இதில் 12 ஆடுகள் இறந்து கிடந்தன. மேலும் 13 ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தன. அவைகளை வனப்பகுதியில் இருந்து வந்த மர்ம விலங்கு கடித்து கொன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.