districts

img

“மூத்தோர் சொல் கேள்” சிறுவர் கவிதைகள் நூல் வெளியீடு

திருவண்ணாமலை, ஜன. 17- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் பெரணமல்லூர் கிளை சார்பில் திரு வள்ளுவர் தின விழா, நூல் வெளியீடு, வைகறை இசை நிகழ்ச்சி, விருதாளார்களுக்குப் பாராட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் பொன்.விஜய அசோகன் தலைமை தாங்கினார். செயலாளர் மா.கவுதம் முத்து வரவேற்றார். பெரணமல்லூர் சேகரன் எழுதிய “மூத்தோர் சொல் கேள்” சிறுவர் கவிதைகள் நூலை பூங்குயில் சிவக்குமார் வெளியிட கவிஞர் ம.பாபு பெற்றுக் கொண்டார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் து.மூர்த்தி, சமூக செயற்பாட்டாளர்கள் அன்பு, வெங்கடேஷ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டத்தலைவர் நா.முத்துவேலன் “மெய்ப்பொருள் காண்பது அறிவு” எனும் தலைப்பில் பேசினார். பெரணமல்லூர் சேகரன் ஏற்புரை வழங்கினார். சங்க இணைச்செயலாளர் பி.மாலவன் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற மைக்கும், அ.சுந்தர்ராஜி திருவள்ளுவர் விருது பெற்ற மைக்கும், தமுஎகசவின் இசைச் சுடர் விருது பெற்ற அமரர் வைகறை கோவிந்தன் சார்பில் அவரது துணைவியாரும் சங்க மாவட்டப் பொருளாளருமான மஞ்சுளா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். சங்க துணைத்தலைவர் இரா. ராஜசேகரன் நன்றி கூறினார்.