districts

சமூக ஆர்வலர் கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை, ஜன. 23- சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா வெட்டி படுகொலை செய்யப் பட்ட வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 3000  அபராதமும் விதித்து தீர்ப ளித்துள்ளது.   திருவண்ணாமலையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும், சமூக செயற்பாட்டாளருமான ராஜ் மோகன் சந்திரா, 2012ஆம் ஆண்டு ஜூலை 2 அன்று கொலை செய்யப் பட்டார். இதுகுறித்து அவரது மனைவி ஆலயம்மா ஜோசப் அளித்த புகாரின் பேரில் திரு வண்ணாமலை நகர காவல் துறை யினர் வெங்கடேசன், செல்வம், வீரா சாமி, மீனாட்சி உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவண்ணாமலை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆலயம்மா ஜோசப், விசா ரணையை விரைந்து முடிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரனைக்கு உத்தரவிட வேண்டும், கணவர் அம்பலப்படுத்திய சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து விசாரிக்க வேண்டும், கணவரின் மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொது மக்களின் நலனுக்காக போராடுபவர் களின் இதுபோன்ற கொலை வழக்குகளைவிரைந்து விசா ரணையை முடிக்க வேண்டும் என திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், இந்த வழக்கில் திங்களன்று (ஜன.23) திரு வண்ணாமலை கூடுதல் மாவட்ட நீதிபதி இருசன் பூங்குழலி தீர்ப்பு வழங்கினார். அதில் சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கு குற்றவாளிகள் திருப்பதி பாலாஜி, மீனாட்சி, முருகன், சந்திர சேகர், ஐயப்பன், விஜயராஜ், சடையன், சுப்பிரமணி ஆகிய 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த செல்வம், காசி ஆகிய இரண்டு பேர் ஏற்கனவே இறந்து விட்டனர் என்பது குறிப்டத்தக்கது.