districts

சேறும், சகதியுமாக மாறியது செண்பகத்தோப்பு அணை சாலை

திருவண்ணாமலை, நவ.6- திருவண்ணாமலை மாவட்டம், கண்ண மங்கலம் அடுத்த படவேடு ஜவ்வாதுமலை அடிவாரத்தில் கமண்டல நதியில் குறுக்கே கட்டப்பட்டுள்ள செண்பகத்தோப்பு அணைக்குசெல்லும் சாலை ராமநாதபுரம் கிராமம் வழியாக செல்கிறது. ராமநாதபுரம் கிராமத்திலிருந்து தொடங்கும் சுமார் 4 கிலோ மீட்டர் சாலை வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது. சாலையை ஒன்றியம் அல்லது ஊராட்சி சார்பில் சீரமைக்க முடியவில்லை. இதனால் இச்சாலை முழுவதும் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சேறும் சகதியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க  வனத்துறையினர் ஒப்புதல் பெற வேண்டிய  நிலை உள்ளதால், கிட்டத்தட்ட போக்கு வரத்துக்கு இடையூறு தரும் சாலையாகவும் காட்சியளிக்கிறது. விடுமுறை தினங்களில் செண்பகத் தோப்பு அணைக்கு ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் அணையை பார்த்து ரசித்து செல்கின்றனர். ஆனால் அணைக்கு வரும் சாலை மிகவும் மோச மாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.  இந்த சாலையில் ஜவ்வாதுமலை வாழ் மக்கள், பெருமாள்பேட்டை துரிஞ்சாபுரம் பகுதி பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும்  சிரமமாக இருக்கிறது. பள்ளி மாணவர்களை  அழைத்துச் செல்லும் ஆட்டோவும் போகமுடி யாத சூழல் நிலவுகிறது. வனத்துறை, ஊராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்களும், இளைஞர் கள் வலியுறுத்தி உள்ளனர்.