districts

img

ஆரணியில் அரசு பேருந்து ஜப்தி

ஆரணி, ஜன. 11- திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த அணியாலை கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (27). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பேருந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.  இதையடுத்து சம்பத் ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து சம்பத்துக்கு ரூ. 7 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிபதி தாவூத் அமால் உத்தரவு பிறப்பித்தார். இதன் மேல்முறையீடு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சில தினங்களுக்கு முன்பு நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நிவாரணத் தொகையை இதுவரை வழங்காத காரணத்தால், நீதிமன்ற உத்தரவின் பேரில் புதனன்று (ஜன.11) ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த (தடம் எண் 202) அரசு பேருந்தை நீதிமன்ற அலுவலர் துரை தலைமையில் ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.