districts

img

வந்தவாசி இஸ்லாமிய மக்களுக்கு பட்டா கேட்டு அமைச்சரிடம் மனு

திருவண்ணாமலை,ஜன.21- வந்தவாசி அடுத்த மாலையிட்டாங்குப்பம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரிடம்  சிபிஎம் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா காரம் ஊராட்சி மதுரா மாலை யிட்டான்குப்பம் கிராமத்தில் பாய் நெசவு, கோரை சாயம் போடுதல் மற்றும் கூலி வேலைகளில் ஈடுபடும் இஸ்லாமிய குடும்பத்தி னர் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். வசிக்க வீடு இல்லாமல் தவித்த அந்த மக்களுக்கு, ஊருக்கு வெளியே தீர்வு ஏற்படுத் தாத தரிசு நிலத்தில் வீடு கட்டி குடியிருக்க ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் போடப்பட்டது. அதனடிப்படையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் அந்த இடத்தை பார்வையிட்டார். அப்போது“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” பெயரில் இந்த நகருக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்தப் பகுதியில் 35 இஸ்லாமிய குடும்பத்தினர் குடிசை வீடு வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்த வீடுகளுக்கு வரி செலுத்தி  யும் வருகிறார்கள். அந்த இடத்திற்கான ஆதார் அட்டை, ரேசன் அட்டைகளை பெற்றுள்ள  னர். இந்நிலையில் , அந்த குடியிருப்புகள் ஆக்கிர மிப்பு பகுதி எனக் கூறி குடிசைகளை காலி செய்ய வந்த வந்தவாசி வட்டாட்சி யர்  நோட்டீஸ் வழங்கினார்.

இதையடுத்து, தங்கள் வசிப்பிடங்களுக்கு பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். மேலும், அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி நடை பெற்ற கிராம சபை கூட்டத்திலும் குடியிருப்பு களை அகற்றக்கூடாது,  பட்டா வழங்க வேண்டும் என தீர்மானமும் நிறை வேற்றினர். அதன் தொடர் நடவடிக் கையாக, பட்டா வழங்கக் கோரி சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.   அந்த மனுவில், கடந்த 2022 மார்ச் 23 அன்று பதிவு அஞ்சல் மூலமாகயும், அதைத் தொடர்ந்து சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் சிக்னதுரை மூலமாவும், தங்களிடம் மனு அளித்துள்ளோம். தற்போது அங்கு குடியிருக்கும் 13 குடும்பத்தாருக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திலும், 9 குடும்பத்தினருக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திலும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. சிபிஎம் மாவட்டச் செய லாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், ப.செல்வன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் எ.அப்துல்  காதர், தலைவர் யாசர் அராபத் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.