districts

img

இருளர் பழங்குடியின மக்களுக்கு வீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, நவ. 9- திருவண்ணாமலை மாவட்டம், தச்சூர் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடி இருளர் இன மக்களுக்கு அரசு வழங்கிய அனைத்து தொகுப்பு வீடு களையும் விரைந்து கட்டித் தர வேண்டும்.  ஆரணி கோட்டத்தில் சாதிச் சான்று கேட்டு விண்ணப்பம் செய்து காத்திருக்கும் அனைத்து பழங்குடி மக்களுக்கும் சான்று வழங்க வேண்டும்,  நிலு வையிலுள்ள வீட்டுமனைப் பட்டாக்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. சர வணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ். சத்யா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம்.மாரி முத்து, சிபிஎம் தலைவர்கள் பெ.கண்ணன், சி.ரமேஷ்பாபு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.