திருவண்ணாமலை, நவ.21- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள மலை கிராமங்களுக்கு சாலை அமைக்க வேண்டும் என, மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திங்களன்று (நவ. 21) மாவட்ட ஆட்சியரிடம் மலை கிராம மக்கள் அளித்துள்ள மனுவில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள பலாமரத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களான புளிச்சக்கொட்டை, வாழக்காடு, சேராமந்தை, நாச்சாமலை மற்றும் மேல்சிலம்படி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களான பதிரி, சின்ன கூத்த னேரி, பெரிய கூத்தனேரி. மோலையனூர் போன்ற எட்டு கிராமங்களில் சுமார் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தங்கள் கிராமங்கள், ஜவ்வாது மலை பேருந்து நிலையம் அமைந்துள்ள ஜமுனா மரத்தூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. தங்கள் கிராமங்களுக்கு செல்லும் சாலை கள் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. ஏராள மான கற்கள் சாலையில் நிறைந்து காணப்படுகிறது. மழை மற்றும் காட்டாறு வெள்ளத்தால் அரித்துச் செல்லப்பட்டு மிக மிக மோசமான சாலைகளாக உள்ளன. அவசர மருத்துவத்திற்கு கூட ஆம்புலன்ஸ் வாகனம் வர முடிவதில்லை. மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை. ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது. ரேஷன் பொருட்களை வாங்கி தலைச்சுமையாக கூட எடுத்துச் செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். எனவே, இந்த பகுதிகளில் தார் சாலை அமைத்து தரவேண்டும் என அந்த மனு வில் தெரிவித்துள்ளனர்.