திருவண்ணாமலை,ஜூன்26- காலியாக உள்ள அரசு பணியிடங்களை முறையான ஊதிய விகிதத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது.
சங்கத் தலை வர் சோட்டாபாய் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் ஏழு மலை வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் சோனாச்சலம் துவக்க உரை யாற்றினார். ஆர். கண்ணன் செயலாளர் அறிக்கையும், பாலசுப்பிரமணியன் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர்.
மாவட்ட நிர்வாகிகள் ரகுபதி, ராஜ கோபால், தங்கராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் தலைவர் பா. கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் எஸ்.பச்சையப்பன் சிறப்புரை யாற்றினர். மாநில செய லாளர் சி. சுப்பிரமணியன் நிறைவுறையாற்றினார். துணைத் தலைவர் ஆதிமூலம் நன்றி கூறினார். மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ செலவை திரும்ப பெற அளிக்கப்பட்டு, நிலுவை யில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும், 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூ தியர்களுக்கு கூடுதல் ஓய்வூ தியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப் பட்டது.