திருவண்ணாமலை, ஜூன்.16- திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி வட்டத்தில் உள்ளது அருங்குணம் கிராமம். இங்கு வசிக்கும் பட்டியல் இன மக்க ளுக்கு 1923 ஆம் ஆண்டில் சுமார் 95 ஏக்கர் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. இதை மாற்று சமூகத்தினர் அபகரித்து உள்ளனர். இதுகுறித்து எழுந்த புகாரின் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதில் முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன், மாவட்டத் தலைவர் எஸ்.ராமதாஸ், சிபிஎம் வந்தவாசி வட்டார செயலாளர் அப்துல் காதர், மாவட்டக் குழு உறுப்பினர் யாசர் அராபத், வாலிபர் சங்க மாவட்டப் பொரு ளாளர் வழக்கறிஞர் மா.சுகுமார், கிளைச் செயலாளர் அ.அண்ணாமலை, மாவட்டப் பொருளாளர் எஸ்.சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வன், “மாற்றுச் சமூகத்தினரால் பறிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக் கோரி பட்டியலின மக்கள் செங்கொடி இயக்கத்தினரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த விவகாரத்தில், மாவட்ட நிர்வாகம் உரிய தலையீடு செய்து பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய பயனாளி
களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.