districts

img

அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கையை உறுதிப்படுத்த வலியுறுத்தல்

திருவண்ணாமலை, டிச. 19- அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளி களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை உறுதிப்படுத்தக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை ஒருவர் அல்லது இருவருக்கு மேல் ஏற்றக்கூடாது என நடத்துனர், ஓட்டுநர் கூறுவதை தடுத்து நிறுத்த வேண்டும், பேருந்துகளில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகள் புகார் அளிக்க தொடர்பு எண்களை அனைத்து பேருந்துகளிலும் விளம்பர செய்ய வேண்டும், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை மீறும் ஓட்டுநர் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி. ரமேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் வீ.ராதா கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் இரா.சிவாஜி, பொருளாளர் ப.சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;