திருவண்ணாமலை,ஜன.23- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் வீரளூர் கிராமத்தில் தலித் அருந்ததியர் மக்கள், மயானத்திற்கு செல்வதற்கு பிரதான பொது சாலையை பயன்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக தாக்கப்பட்டனர். பொதுப் பாதையை பயன்படுத்திய அருந்ததிய மக்கள் ஆதிக்க சாதியினரால், தாக்கப்பட்டதுடன் அவர்களின் உடமைகள், அடித்து நொறுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தலித் மக்களை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் , மாநில துணைத் தலைவர் முத்து, திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் கணபதி, மாவட்டச் செயலாளர் பிரகலநாதன், மாவட்டப் பொருளாளர் பாலசுந்தரம் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கலசப்பாக்கம் ஒன்றியச் செயலாளர் சுந்தர் மற்றும் முன்னணி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.