districts

img

குடியிருக்கும் வீடுகளை அகற்ற வேண்டாம்: கிராம மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை,செப்.29- திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி பகுதி யில், ஏழை, எளிய மக்கள் குடியிருக்கும் வீடுகளை மழைக்காலத்தில் அகற்ற வேண்டாம் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம் கடலாடி கிராமம் அம்பேத்கர் நகர், போளூர் மெயின் ரோடு, கடலாடி மேலக்கோடி கிராமம் ஆகிய பகுதி களில் தலைமுறை தலை முறையாக வசித்து வரும் மக்களின் குடியிருப்பு களுக்கு பட்டா வழங்கக் கோரி மனு அளித்தும் இதுவரை பட்டா வழங்க வில்லை.  இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் வீடுகளை உட னடியாக காலி செய்ய நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது. பருவ மழை தொடங்க உள்ள நிலை யில், மாற்று இடம் இல்லா மல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மூன்று மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அது வரைக்கும்  உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக் குமார், செயற்குழு உறுப்பி னர்கள் ப.செல்வன், எஸ். ராமதாஸ், வட்டார செய லாளர் பி.சுந்தர், ச.குமரன், அண்ணாமலை உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

;