districts

img

தோழர் சி.அ.செல்வம் உடல் அடக்கம்

திருவண்ணாமலை, நவ.2- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திரு வண்ணாமலை மாவட்டக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் மாவட்டச் செயலா ளராகவும் செயல்பட்டவர் சி.அ.செல்வம் (53). உடல் நலக் குறைவு காரணமாக செவ்வாயன்று (நவ.1) இரவு 10.50 மணிக்கு கால மானார். அவரது உடலுக்கு கட்சி யின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், ப.செல்வன், எம்.பிரகலநாதன், எஸ்.ராம தாஸ், ஏ.லட்சுமணன், வட்டாரச் செயலாளர் ரவிதாசன், மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்டத் தலைவர் ரமேஷ்பாபு, செயலாளர் சிவாஜி உள்ளிட்டோர் மலர் வளை யம் வைத்துஅஞ்சலி செலுத்தினர்.  அதனைத் தொடர்ந்து அவரது உடல் போளூர் அடுத்த கருங்காலிக்குப்பம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ஆகாசவாணி (48) என்ற மனைவியும், லோகநாதன், அண்ணாமலை என்ற இரு மகன்களும், புனிதா என்ற ஒரு மகளும் உள்ளனர்.